மீடியா உலகில் முஸ்லிம்கள்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –30

Tuesday, May 1st, 2012
media1-270x170

நாம் என்​னென்ன​ செய்யலாம்? இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் ​செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்க​ளை எதிர்​கொள்ளவும், நமது நி​லை​யைத் ​தெளிவுபடுத்தவும் நமக்​கென்று பத்திரி​கைகள், ​​தொ​லைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம். நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன. மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின் அளவிலும் இருக்கவேண்டும். [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –29

Saturday, March 17th, 2012
media1-270x170

    பிரஸ் கவுன்சி​லை நாம் எப்படி அணுகுவது, எந்த மு​றையில் புகாரைப் பதிவு ​செய்வது, எந்​தெந்த ஆவணங்க​ளை இ​ணைத்து அனுப்புவது ​போன்ற​​வை குறித்து ​சென்ற ​தொடரில் கண்​டோம். பிரஸ் கவுன்சிலின் முகவரி இ​தோ: Press Council of India Soochana Bhavan 8, CGO Complex, Lodhi Road New Delhi – 110 003 Web : www. presscouncil.nic.in Email : pcids@vsnl.net மாற்று ஊடகத்​தை ​நோக்கி… மீடியா​வை எப்படி அணுகுவது, பத்திரி​கைகளுடன் [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –28

Friday, February 10th, 2012
media1-270x170

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்க​ன​வே பார்த்தபடி சட்டரீதியானஅதிகாரம் ​கொண்ட ஓர் அ​மைப்பு. பிரஸ் கவுன்சில் (விசார​​ணைக்கான மு​றை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ்யார் ​வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட மனித​ரோ, ​நேரடியாக ஈடுபட்ட மனித​ரோதான் புகார் அளிக்க​வேண்டும் என்றில்​லை. பத்திரி​கைத்து​றையின் ​தொழில் தர்மம் மீறப்பட்டதாக ​​​பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இத​னை பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்குக் [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –27

Tuesday, January 31st, 2012
media1-270x170

பிரஸ் கவுன்சி​லை அணுகுதல் ஊடகத்தில் எதுவும் அநீதி நடந்தால் அத​னை மு​றையிட்டு நீதி ​பெறுவதற்குரிய சட்டரீதியான அதிகாரம் ​கொண்ட அ​மைப்புதான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. இதன் த​லைவராக ஓய்வு​ ​பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். சட்ட ரீதியான அதிகாரம் என்றவுடன் வானளாவ அதிகாரம் ​கொண்டது என்று எண்ணி விட​ வேண்டாம். அந்த அளவுக்கெல்லாம் அதிகாரம் கி​டையாது. இருந்தாலும் பிரஸ் கவுன்சிலின் பார்​வை, கருத்துகள் மீடியா உலகில் கவனத்தில்​கொள்ளப்படுகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா குறித்த விவரங்களுக்குள் ​போகும் [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –26

Thursday, January 12th, 2012
media1-270x170

தொ​லைக்காட்சியில் நடக்கும் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளில் நம்மால் எளிதாகத் தலையிட முடியும். அந்த நிகழ்ச்சியில் கலந்து​கொள்ளும் நபர்க​​ளை நிகழ்ச்சித் தயாரிப்பாளரால் முழு​மையாகக் கட்டுப்படுத்த முடியாது. இதுதான் நமக்கு அனுகூலம். கலந்து​கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கி​டைத்தால் அதனை முழு​மையாகப் பயன்படுத்த ​வேண்டும். ​கேமராவின் முன்பாகப் ​பேசுவதற்கு சில திற​மைக​ளை வளர்த்துக்​கொள்ள​வேண்டும். திற​மைகள் என்றதும் பயந்துவிட​வேண்டாம். சாதாரண விஷயங்கள்தாம். ​கேமராவின் முன்பாக அ​​மைதியான மனநி​லையுடன் காட்சியளிக்க ​வேண்டும். படபடப்பாகக் காணப்படக் கூடாது. இன்முகத்துடன், இனிமையாகப் ​பேச​வேண்டும். நிதானமாக, ​தெளிவாகப்​ பேச​வேண்டும். [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –25

Thursday, January 5th, 2012
media1-270x170

நமது​ தொ​லைக்காட்சிச் சானல்களில் வரும் நிகழ்ச்சிகளில் ​பெரும்பாலான​வை முற்கூட்டி​யே தயாரிக்கப்பட்ட​வை, முன்னரே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட​வை. ​நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் கூட எல்லாம் நாடக மயம்தான். அவர்கள் மக்களின் பிரதிநிதிக​ளை அ​ழைப்பது ​போலிருக்கும். ஆனால் அவர்கள் விரும்பும் மக்க​ளைத்தான் அ​ழைப்பார்கள். அவர்கள் விரும்பும் ​கேள்வி​க​ளை மட்டும்தான் ​கேட்பார்கள். அவர்கள் விரும்பும் பதில்கள்தான் வரும். அப்படி​யே மாற்றமான பதில்கள் வந்தால் கத்திரி வி​ளையாடிவிடும். இப்​பொழுது அந்தநி​லை ​கொஞ்சம் மாறி வருகிறது. 2007ம் ஆண்டு இறுதியில் கரன் தாப்பர் சிஎன்என் ஐபிஎன்​ [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் –24

Thursday, December 29th, 2011
media1-270x170

மின்னணு ஊடகங்கள் ​தொ​லைக்காட்சியின் அசுர வளர்ச்சியும், பயன்பாடும், அதன் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அபரிமிதமான ஆர்வமும், மிக எளிதாகப் ​போய்ச் ​சேரும் அதன் தன்​மையும் மின்னணு ஊடகங்களில் நமது த​லையீட்டின் அவசியத்​தை வலியுறுத்தி நிற்கின்றன. ஒரு காலத்தில் ​தொ​லைக்காட்சி என்றா​லே தூர்தர்ஷன்தான். புதன்கிழமைகளில் ஒளிபரப்பப்படும் “ஒலியும் ஒளியும்” மிகவும் பிரபலம். தவமாய்த் தவமிருந்து அத​னைக் கண்டு களித்​​தோர் பலர். “ஒலியும் ஒளியும்”​ ஒளிபரப்பப்படும் நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் அந்த ​வெட்​டைச் ​செய்தவருக்கு மட்டுமல்ல, அவரது பல தலைமு​றைகளுக்கும் [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 23

Wednesday, December 21st, 2011
media1-270x170

பத்திரி​கையாளர்களுடன் ​தொடர்புக​ளை வலுப்படுத்துங்கள் தனிப்பட்ட மு​றையில் நட்புக​ளை வளர்த்துக்​ கொள்வது பல வழிகளிலும் நன்​மை பயக்கும். நல்ல ஒரு முஸ்லி​மை நண்பனாகக் ​கொண்ட ஒரு பத்திரி​கையாளர் அந்த முஸ்லிம் சார்ந்த சமுதாயத்திற்​கெதிராக எழுதுவதற்கு ஒரு தட​வைக்கு பல தட​வை ​யோசிப்பார். இஸ்லாத்திற்​கெதிராக எழுதுவதற்கு இஸ்லாம் பற்றிய அறியாமையும், முஸ்லிம்களுடனான ​தொடர்பின்​மையும் தான் மிக முக்கிய காரணம். ஆதலால் உங்களுக்கு அருகில் ஊடகத்தில் ​தொடர்பு​டையவர் யார் இருக்கிறார் என்ப​தை முதலில் அறிந்து ​கொள்ளுங்கள். நகரங்களில் வசிப்பவர்கள் உங்கள் வார [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 22

Wednesday, December 14th, 2011
media1-270x170

நாம் எங்​கே தவறி​ழைக்கி​றோம்? அரிதாகக் கடிதம் எழுதும் நம்மவர்களும் ஒன்​றை மறந்துவிடுகிறோம். நமக்​கெதிராகச் ​செய்திகள் வரும்பொழுது அவற்றைக் கண்டித்து கடிதம் எழுதும் நாம் முஸ்லிம்களுக்கு ஆதரவாக ​​செய்திகள் வரும்​பொழுது அவற்றை ஆதரித்து கடிதம் எழுத மறந்து விடுகி​றோம். இங்​கேதான் நாம் தவறி​ழைக்கி​றோம். ஒரு முஸ்லிமின் கருத்​தை ஒரு பத்திரி​கையாளர் ஆதரித்து எழுதுகிறார் என்றால் நாம் அந்த எழுத்தாளருக்கு நமது நன்றி​யையும், பாராட்​டையும், மகிழ்ச்சி​யையும்​தெரிவிக்க​வேண்டும். எந்தப் பக்கமும் சாராமல் நடுநி​லையான சிந்த​னை​ கொண்ட பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள். முஸ்லிம்களுக்​​​கெதிராக அநியாயமாக [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 21

Wednesday, December 7th, 2011
media1-270x170

சென்ற தொடரில் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுவதற்கு நாம் க​டைப்பிடிக்க ​வேண்டிய 9 அம்சங்க​ளைப் பார்த்​தோம். இனி அதன் ​தொடர்ச்சியாக அடுத்த அம்சங்க​ளைப் பார்ப்​போம். 1.   10. எந்தச்​செய்தி குறித்து மடல் ​வ​ரைகி​றோ​மோ அந்தச் ​செய்தி​யை முதலில் குறிப்பிட​வேண்டும். பாராட்டுதலுக்குரிய அம்சங்கள் ஏதேனும் அதில் இடம்​பெற்றிருந்தால் முதலில் அதற்காக நமது பாராட்டுக​​ளையும், மகிழ்ச்சி​யையும் ​தெரிவிக்க​வேண்டும். அது இல்​லை​யெனில் கடிதத்​தைஉடன்பாடான விமர்சனங்க​ளைக் ​கொண்டு (Positive Remarks) ஆரம்பியுங்கள். ஆரம்பம் இந்தமாதிரி அ​மைந்தால் அது அவர்களின் உள்ளங்களில் உங்கள் கடிதத்​தைக் குறித்த [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 20

Sunday, November 27th, 2011
media1-270x170

மீடியாவை எதிர்கொள்வதுஎப்படி? மீடியாவை நாமும் எதிர்கொள்ளலாம். ஆக்கபூர்வமாக சில பணிகளைச் செய்யலாம். பாதிப்புகளை ஓரளவு தடுக்கலாம். அது எப்படி என்று காண்போம். ஒரு நாட்டின் பணிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது மீடியா. அதனை நாம் தவிர்த்துவிட்டு வாழவே முடியாது. ஆதலால் அதனை எப்படி எதிர்கொள்வது, எப்படி பயனுள்ள வகையில் நடத்துவது, எப்படி நமக்குச் சாதகமாக மாற்றுவது என்பதைப் பற்றித்தான் நாம் ஆலோசிக்க வேண்டும். முதலில் ஒன்றை நாம் மனிதல் இறுத்த வேண்டும். மொத்த மீடியாவும் ஒரு [...]

மீடியாஉலகில் முஸ்லிம்கள் – 19

Sunday, October 9th, 2011
media-270x170

2002ல் நடந்த குஜராத் இனப் படுகொலையின் பொழுது அங்குள்ள சில நாளிதழ்கள் எவ்வாறெல்லாம் பொய்ச் செய்திகளை வெளியிட்டு கலவரத் தீயை மூட்டின என்று பார்த்து வருகின்றோம். மார்ச் 7 அன்று குஜராத் சமாச்சார் நாளிதழின் கடைசிப் பக்கத்தில் வெளிவந்த ஒருபெட்டிச் செய்தியில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “ஐ.எஸ்.ஐ, குஜராத்தில் பிரச்னைகளை உருவாக்குகிறது. கலோட்டாவும், அவருடன் பணி புரிபவர்களும் இதில் முக்கிய தொடர்புள்ளவர்கள். கொல்கத்தாவில் கைதான HUJI என்ற அமைப்பின் துணைத் தளபதி இந்தச் சதித் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.” இந்தச் [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 18

Saturday, July 30th, 2011
media

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் மீடியா எப்படி தவறாகப் பிரச்சாரம் செய்தது என்பதை நாம் பார்த்து வருகின்றோம். இந்த இனப்படுகொலை நடந்து முடியும் வரை சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்களை தேச விரோதிகளாகவும், பாகிஸ்தான் ஆதரவாளர்களாகவுமே சித்தரித்தது. முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதிகளை “குட்டி பாகிஸ்தான்” என்று அது சித்தரித்தது. 2002 மார்ச் 7 அது ஒரு செய்தியை வெளியிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை கராச்சியோடு தொடர்பு படுத்தி அந்தச் செய்தி வெளிவந்தது. கராச்சியில் கோத்ரா என்ற [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள்–17

Sunday, June 19th, 2011
MEDIA-ULAGILMUSLIMKAL

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலை நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவிட அங்குள்ள மீடியா செய்த தவறான பிரச்சாரம் மிக முக்கிய காரணமாக அமைந்தது. மார்ச் 16ம் தேதி வதோதராவில் மச்சிப்பித் என்ற இடத்தில் 4 முஸ்லிம் இளைஞர்களைப் போலீஸ் பிடிக்கிறது. அவர்கள் டாடா சுமோ வாகனத்தில் ஆயுதங்களை வைத்திருந்தார்களாம். ஆனால் இந்தச் செய்தியை சந்தேஷ் நாளிதழில் படிக்கும் ஒருவருக்கு அந்த வாகனம் முழுவதும் ஆயுதங்களை அந்த இளைஞர்கள் கடத்திக்கொண்டு வந்ததாகத் தோன்றும். உண்மை என்னவென்றால், [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 16

Sunday, June 12th, 2011
MEDIA

2002ல் நடந்த குஜராத் இனப்படுகொலையில் அங்குள்ள மீடியாக்களின் பாரபட்சமான பங்கு குறித்து நாம் பார்த்து வருகின்றோம். குஜராத் இனப்படுகொலை குறித்து நேரடிக் கள ஆய்வு செய்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் என்ற மனித உரிமை அமைப்பு “மனித இனத்திற்கெதிரான குற்றம்” என்ற தலைப்பில் இரண்டு பாகங்களாக அறிக்கைகளை வெளியிட்டது. அந்த அறிக்கையில் குஜராத் இனப்படுகொலை குறித்து வெளிவந்த செய்தியைத்தான் நாம் இப்பொழுது பார்த்து வருகின்றோம். அந்த அறிக்கையின் தொடர்ச்சி வருமாறு: மீடியாவில் வந்த செய்திகளை வைத்தும், இந்தக் [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 15

Wednesday, April 20th, 2011
media

குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் அளித்த அறிக்கையின் தொடர்ச்சி தொடர்கிறது: பிப்ரவரி 28 அன்று அதிகமாக விற்பனையாகும் சந்தேஷ், குஜராத் சமாச்சார் ஆகிய இரண்டு குஜராத் செய்தித்தாள்கள் கோத்ரா ரயில் எரிப்பில் “அந்நியக் கைகள்” இருக்கின்றன என்ற அரசின் பொய்ச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக்கொண்டே இருந்தன. 3-4 வாரங்கள் கழித்து இந்தச் செய்தி மகா பொய்யானது என்று மீடியாவில் கசிய ஆரம்பித்தது. ஆனால் அதற்குள் அனைத்து அக்கிரமங்களும் அரங்கேறி [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 14

Thursday, April 7th, 2011
media

சென்ற தொடரில் குஜராத் இனப் படுகொலையில் மீடியாவின் பங்கு குறித்து அக்கறையுள்ள குடிமக்களின் குழுமம் (Concerned Citizens Tribunal) வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதியைக் கண்டோம்.இனி அதன் தொடர்ச்சியைக் காண்போம். “இரவு 7.30 மணிக்கு ஆகாஷவாணி வானொலியில், “கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னால் ஐ.எஸ்.ஐ.யோ அல்லது ஒரு வெளிநாட்டு சக்தியோ உள்ளது” என்று முதல் முறையாக மோடி அறிவித்தார். இது குஜராத் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவும்,பா.ஜ.க.வின் நிலைப்பாடாகவும் வெளிப்பட்டது. அதேபோல் அவரது சங்கப் பரிவாரக் கூட்டாளிகளுக்கு ‘எதிர்வினை’க்கான [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 13

Sunday, April 3rd, 2011
media

மீடியா எப்படி முஸ்லிம்களைக் கொல்கிறது? இங்கே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும்,பிரபல மனித உரிமை ஆர்வலருமான வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்களின் கூற்றைக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். 2002ம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையில் முஸ்லிம் இனப்படுகொலைகள் நடந்தேறின.ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டு, உயிரோடு எரிக்கப்பட்டார்கள். பிஞ்சுக் குழந்தைகள் கூட வாயில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொல்லப்பட்டார்கள். கோடிக்கணக்கான முஸ்லிம்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன; அழிக்கப்பட்டன. இந்தக் கொடுமைகளைக் கண்டு திடுக்குற்ற நடுநிலையான மனித உரிமை ஆர்வலர்கள் [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 12

Monday, March 28th, 2011
media

சென்ற தொடர்களில் மொத்த மீடியாவிலும் நடந்துகொண்டிருக்கும் விஷமப் பிரச்சாரங்களின் பின்னணியைப் பார்த்தோம். இந்தப் பின்னணியை நாம் எதற்காக விளக்கினோம் என்றால் இதனைப் புரிந்துகொண்டால்தான் இதற்குப் பிறகு வரும் விஷயங்கள் நமக்கு நன்றாகப் புரிய வரும். Call the dog mad and then shoot ஆங்கிலத்தில் Call the dog mad and then shoot என்று சொல்வார்கள். அதாவது, ஒரு நாயை அது வெறி பிடித்த நாய், பைத்தியம் பிடித்த நாய் என்று சொல்லி, அதன் [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 11

Saturday, March 19th, 2011
media

கலீஃபா ஹாரூன் அல் ரஷீத் அவர்கள் பேரரசர் சார்லி மேக்னி (Emperor Charlemagne) என்ற கிறிஸ்தவ மன்னருக்குத் தூதுச் செய்தியை அனுப்பி நீண்ட காலமாக நிலவி வந்த பகைமையுணர்ச்சியைப் போக்கி நட்புறவையும், நல்லுறவையும் வளர்க்க முயற்சி செய்தார். ஆனால் ஐரோப்பா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று சென்ற தொடரில் கண்டோம். ஆதலால் மனிதகுல வரலாற்றில் நாடுகளுக்கிடையில் பலப்பல போர்கள் நடைபெற்றன. பலப் பல மனித உயிர்கள் மாண்டன. காலச் சக்கரம் உருண்டோடியது. நிலைமைகள் மாறின. பழைய [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 10

Saturday, March 19th, 2011
media

இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் மேற்குலகம் தொடுக்கும் தாக்குதல்கள் அனைத்தும் சிலுவைகளின் (Crusades) அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது என்று சென்ற தொடரில் கண்டோம்.  இந்தச் சிலுவைகள்தாம் பலப் பல நூற்றாண்டுகளாக இஸ்லாத்தின்பால் ஐரோப்பாவின் மனநிலையை – அதன் கண்ணோட்டத்தைத் தீர்மானித்து வைத்துள்ளது.  ஐரோப்பா இருண்ட கண்டமாக இருந்து, அது தன் வளர்ச்சியைத் தொடங்கிய பொழுதே இந்தச் சிலுவைகள் அங்கே தமது ஆதிக்கத்தை அரங்கேற்றிவிட்டன.  அங்கே என்ன கலாச்சாரம் நிலவ வேண்டும், என்ன பண்புகள் மிளிர வேண்டும் என்று அவைதாம் [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 9

Tuesday, March 8th, 2011
media

பகைமையின் வேர்கள் முன்பெல்லாம் இரு நாடாளும் அவைகளிலும் (பாராளுமன்றம், ராஜ்யசபை) என்ன பேசப்பட்டதோ, விவாதிக்கப்பட்டதோ, முடிவெடுக்கப்பட்டதோ அவைதான் மீடியாவில் செய்திகளாக வெளிவரும். ஆனால் இப்பொழுது மீடியாவில் என்ன செய்திகளாக வெளிவருகின்றனவோ அவையே நாடாளும் அவைகளில் விவாதப் பொருளாக மாறுகின்றன. மீடியாவுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒன்றே சாட்சி. இன்று தகவல்களின் உலகம் (World of Information) என்பது அபார வேகத்தில் அசுர வளர்ச்சி பெற்று வருகிறது. “அறிவே பலம்” (Knowledge is Power) என்ற [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 8

Tuesday, March 8th, 2011
media

தி இந்தியன் எக்ஸ்பிரஸ், டைம்ஸ் ஆஃப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய ஆங்கில நாளிதழ்கள் இஸ்லாமியக் கொள்கைகளுக்கும், முஸ்லிம்களுக்கும் மட்டும் எதிரானவை அல்ல. இன்னும் பல விஷயங்களுக்கும் எதிரானவை என்று சென்ற தொடரில் பார்த்தோம். இந்த ஆங்கில நாளிதழ்கள் கூட்டாட்சி, இடஒதுக்கீடு, தன்னாட்சி, ஏழைகளுக்கு மானியம் வழங்குதல், நாட்டு நலப்பணித் திட்டங்கள் போன்ற மக்களுக்கு நன்மை சேர்க்கும் அனைத்துக் கொள்கைகளுக்கும் எதிரானவை. அதிகார வர்க்கம் என்ன எண்ணுகிறதோ அவையே இந்த நாளிதழ்களில் பிரதிபலிக்கும். தேசிய அளவில் தரமான [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 7

Tuesday, March 8th, 2011
media

அமெரிக்காவின் ஏகாதிபத்தியக் கொள்கைகளைப் பரப்பும் முகமாக அங்கே அனைத்து ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்படுகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். இனி இந்தியாவை எடுத்துக்கொள்வோம். இங்கேயும் அதிக வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒரு காலத்தில் இந்திய நாளிதழ்கள் துப்பறிவதற்குப் பெயர் போனதாக விளங்கின. எந்தச் சம்பவம் நிகழ்ந்தாலும் உடனே செய்தியாளர்கள் களத்தில் இறங்குவார்கள். பரபரப்பாக இயங்குவார்கள். அலசி ஆராய்ந்து உண்மைச் செய்திகளை உடனுக்குடன் உலகுக்கு தருவார்கள். யாரும் செல்ல முடியாத இடத்திற்கும் ‘அலேக்காக’ சென்று, எவருக்கும் கிடைக்காத [...]

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 6

Tuesday, March 8th, 2011
media

ஒரு சதவீத மக்களால் நிர்வகிக்கப்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை அதிக சக்தி படைத்த ஊடகங்களான தொலைக்காட்சியும், ஹாலிவுட் திரைப்படங்களும் உலகெங்கும் பரப்பி வருகின்றன என்று சென்ற தொடரில் கண்டோம். அமெரிக்க தேசிய ஆர்வம் என்பது அடிப்படையில் 4 அம்சங்களைக் கொண்டதாக இருக்கும். அவையாவன: 1.யார் எப்படிப் போனாலும் எனக்குக் கவலையில்லை என்ற அடிப்படையில் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்காக தேடுதல். 2.யூத ஸியோனிஸவாதிகள் ஃபலஸ்தீன மண்ணில் குடியேற்றங்களை நிறுவ அபரிமிதமான ஆதரவை அளித்தல். 3.இராணுவத் தளவாட உற்பத்தியில் இலாப நோக்கு [...]