ஆரோக்கியம்
Thursday, May 17th, 2012
உலகெங்கும் பக்கவாதம், இதய நோய் மற்றும் புற்று நோய் அபாயங்களை கூடுதலான மக்கள் எதிர்கொள்கிறார்கள் என்று சர்வதேச சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது. தனது 194 உறுப்பு நாடுகளிலிருந்து சுகாதாரம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகள் உலகெங்கும் அதிகரித்து வருவதாக கூறியுள்ளது. மக்கள் கூடுதலாக கொழுப்புள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் உப்பை அதிகமாக உட்கொண்டு, குறைவான உடற்பயிற்சிகளை செய்கிறார்கள் என்று அந்த அமைப்பு [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | No Comments »
Thursday, May 10th, 2012
பாரிஸ்:பிரான்சில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு(International Agency for Research on Cancer in Lyon) நடத்திய ஆய்வில் உலக அளவில் புற்றுநோய் வரும் நபர்களில் ஆறில் ஒருவருக்கு இந்த நோய் கிருமித் தொற்றுக்களினால் (Bacteria, viruses and parasites) ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. மக்களுக்கு வருகின்ற புற்றுநோய்களில் ஒரு பங்கு தவிர்க்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய கிருமித் தொற்றுகளினால் ஏற்படுகிறது என இந்த ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது. அவ்வாறெனில்,கிருமித் தொற்றினால் புற்றுநோய் வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு கிட்டத்தட்ட [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 1 Comment »
Wednesday, May 9th, 2012
இயற்கைச் சூழலை அனுபவிக்காத நகர்ப்புற வாழ்க்கை காரணமாகவே பலருக்கு அலர்ஜி(ஒவ்வாமை) ஏற்படுவதாக பின்லாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மனிதர்களுக்கு நன்மை பயக்கக்கூடிய குறிப்பிட்டவகை நுண்ணுயிரிகள் நகர்ப்புறம் சாராத பசுமை சூழ்ந்த இயற்கைச் சூழலில் அதிகம் காணப்படுவதாகவும், அத்தகைய சூழலில் வாழும் மனிதர்களுக்கு ஒவ்வாமை குறைவாக இருப்பதாகவும் இந்த ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், அப்படியான பசுமை சூழலற்ற நகர்ப்புறத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் பயன் கிடைப்பதில்லை என்பதால் அத்தகையவர்கள் மத்தியில் ஒவ்வாமை அதிகரித்து காணப்படுவதாகவும் இந்த ஆய்வாளர்கள் [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | No Comments »
Tuesday, April 17th, 2012
கடந்த முறை ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) என்றால் என்ன அதன் தீவிரம் என்ன என்பது பற்றிப் பார்த்தோம். இந்தவாரம் குறட்டை மற்றும் ‘ஸ்லீப் ஆப்னியா’வுக்கான சிகிச்சை முறைகள் பற்றி பார்ப்போம். குறட்டை சாதாரணமானதா அல்லது ‘ஸ்லீப் ஆப்னியா’ (Sleep Apnea) என்கிற பிரச்னையா என்பதைப் பொருத்தே, அதற்கான சிகிச்சைகள் இருக்கின்றன. அதனால், குறட்டையின் தன்மையைக் கண்டுபிடிப்பதற்கு ‘ஸ்லீப் ஸ்டடி’ எனப்படும் பரிசோதனை முறையை முதலில், மேற்கொண்டாக வேண்டும். குறட்டை விடுகிறீர்களா? அந்தக் குறட்டையினால், மூச்சு ஓட்டம் [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Wednesday, April 4th, 2012
‘ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)’ இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு கூடவே இரத்த அழுத்தம், சர்க்கரைப் பாதிப்புகளும் இருந்தால், அவர்கள் முதலில் ஸ்லீப் ஆப்னியா நோயைக் கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகே அவர்களால் ரத்த அழுத்தத்தையும் சர்க்கரையையும் கட்டுப்படுத்த முடியும்! அது என்ன ஸ்லீப் ஆப்னியா(sleep apnea)? தூக்கத்தின்போது மூச்சு நின்றுவிடுவது ஸ்லீப் ஆப்னியா(sleep apnea). ஸ்லீப் ஆப்னியா நோயின் முக்கிய அறிகுறி குறட்டை. ஆனால், குறட்டை பிரச்னை இருக்கும் எல்லோருக்கும் ‘ஸ்லீப் ஆப்னியா’ நோய் இருக்கிறது [...]
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 1 Comment »
Sunday, April 1st, 2012
புதுடெல்லி:கேஎஃப்சி உள்ளிட்ட சர்வதேச உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உணவுப்பொருட்களில் விஷத் தன்மையை மூடிமறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. மக்களை தவறாக புரியவைக்கும் விளம்பரங்களை இவர்கள் அளிப்பதாக டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அரசு சாரா அமைப்பான செண்டர் ஃபார் ஸயன்ஸ் அண்ட் என்விரான்மெண்ட்(சி.எஸ்.இ) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இத்தகைய பெரிய நிறுவனங்கள் தயாரிக்கும் உணவுப்பொருட்களில் உடல் பருமன், நீரழிவு(சர்க்கரை வியாதி) நோய்களுக்கு(obesity and diabetes) காரணமான ட்ரான்ஸ் ஃபேட், இனிப்பு மற்றும் உப்பின்(rans-fats, salts and sugar) அளவு [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Thursday, March 29th, 2012
புதுடெல்லி:இந்தியாவில் புற்றுநோயால் பலியானவர்களில் 70 சதவீதம்பேர் இளைஞர்கள் என்று தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தியாவில் கடந்த 2010 ஆம் ஆண்டில் புற்றுநோய்க்கு பலியானவர்களில் 30-69 வயதுக்குள்ளானவர்கள் 70 சதவீதம்பேர் என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அதிலும் புகைப்பதால் ஏற்படும் புற்றுநோய் பாதித்து உயிரிழந்தவர்களே அதிகம் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. தி லான்ஸெட் இதழில் வெளியான ஆய்வறிக்கையின் படி, இந்தியாவில் 2010ம் ஆண்டு புற்றுநோய் பாதித்து 5,56,400 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,95,000 [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Monday, March 26th, 2012
உடல் உறுப்புகளில் அடி ஏற்படும்போது, தோலுக்கு அடியில் உள்ள மெல்லிய ‘முடிவு இரத்த நாளங்கள்’ மற்றும் தசை செல்களில் சிதைவு ஏற்படும். இதனால், தோல் பகுதியைக் கிழித்துக்கொண்டு இரத்தம் வெளியேற முடியாமல் தோலுக்கு உள்ளேயே தேங்கி நின்றுவிடும். இதைத்தான் இரத்தக்கட்டு என்கிறோம். விளையாடும்போதோ, எங்கேயாவது இடித்துக் கொள்ளும்போதோ அல்லது தவறி விழும்போதோ வெளிப்புறமாக ஏற்படுவதுதான் இந்த இரத்தக்கட்டு. பொதுவாக காயம் ஏற்பட்டவுடன் அதைக் குணப்படுத்தும் விதமாக பாதிக்கப்பட்ட இடத்தில் நிணநீர்(Lymph) வந்து சேரும். காயமானது சிறிய அளவில் [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 3 Comments »
Thursday, March 22nd, 2012
லண்டன்:வலி நிவாரணியான ஆஸ்பிரினை தினமும் உபயோகிப்பது புற்றுநோய் பீடிப்பதை தடுக்கும் என்று ஆய்வு கூறுகிறது. விஞ்ஞான பத்திரிகையான த லான்ஸெட்டில் வெளியான இதுத்தொடர்பான 3 கட்டுரைகளில் ஆஸ்பிரினை தினமும் குறைந்த அளவில் உட்கொள்வது புற்றுநோயை தடுக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கூடுதல் பிரபலமான ஆதாரங்கள் கிடைக்காததால் ஆஸ்பிரினை தினந்தோறும் உபயோகிப்பது பக்கவிளைவுகளை அதிகரிக்கச் செய்யும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பீட்டர் ரோத்வெல்லும், குழுவினரும் ஆஸ்பிரின் உபயோகம் புற்றுநோயை தடுக்கும் என கூறுகின்றனர். [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 2 Comments »
Tuesday, March 13th, 2012
புதுடெல்லி:2.84 லட்சம ரூபாய் மதிப்புடைய புற்று நோய்க்கான மருந்து ரூ.8880 க்கு விற்பனைச் செய்ய மத்திய அரசு ஹைதராபாத்தை மையமாக கொண்டு இயங்கும் நாட்கோ ஃபார்மாவுக்கு(Natco Pharma) அனுமதி அளித்துள்ளது. ஜெர்மன் பன்னாட்டு நிறுவனமான பேயர் கார்ப்பரேசன்(Bayer Corporation) தயாரிக்கும் நெக்ஸாவர்(Nexavar 200mg) 200 எம்.ஜி என்ற மருந்து தற்பொழுது கிடைக்கும் விலையில் 30 மடங்கு குறைந்த விலைக்கு தயாரிக்கவும், விற்பனைச் செய்யவும் ஹைதராபாத்தில் உள்ள மருந்து கம்பெனிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்திய காப்புரிமை(patent [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Sunday, March 11th, 2012
புதுடெல்லி:புற்றுநோயை உருவாக்கும் இரசாயன பொருளை அனுமதிக்கப்பட்டதற்கும் அதிகமாக கோலாக்களில் கலந்திருக்கும் தகவல் வெளியானதை தொடர்ந்து அமெரிக்காவில் சந்தையில் அளிக்கப்படும் கோலாக்களின் சேர்மானங்களில் மாற்றங்களை கொண்டுவர பெப்ஸியும், கோக்கோ கோலாவும் தீர்மானித்துள்ளன. ஆனால் இக்கம்பெனிகள் இந்தியாவில் சேர்மானங்களின் மாற்றத்திற்கு தயாராகுமா என்பது கேள்விக்குறியாகும். கோக்கோ கோலாவிலும், பெப்ஸியிலும் தவிட்டு நிறத்திலான 4-மீதைலிமிடாசோல்(4-methylimidazole, or 4-MI) என்ற இரசாயன பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கலக்கப்பட்டுள்ளது. இதனை அமெரிக்காவில் செண்டர் ஃபார் ஸயன்ஸ் இன் தி பப்ளிக் இண்டரஸ்ட்(Center [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Wednesday, March 7th, 2012
டெல்லி:சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்தியாவில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக சிறுநீரக வியாதி வருவதாகவும் 90,000 பேர் முற்றிய சிறுநீரக செயலிழப்பாக மாறி அவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவைப்படுவதாகவும் தெரிய வந்துள்ளது. டயாலிசிஸ் (இடைச்சவ்வூடு மூலம் சிறுநீர் கலவை பிரித்தல்), இந்த சிகிச்சை முறைக்கு [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Tuesday, February 21st, 2012
லண்டன்:நோன்பு அல்லது விரதம் இருப்பதால் உடலில் சர்க்கரை குறைந்துவிடும், வயிற்றில் அமிலம் சுரந்து அல்சர்(குடல் புண்) வந்துவிடும் என்று பலருக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு. ஆனால், முஸ்லிம்கள் 14 நூற்றாண்டுகளுக்கும் மேலாக தங்களது மார்க்கத்தின் அடிப்படை கடமைகளில் ஒன்றாக நோன்பை வருடந்தோறும் ரமலான் மாதத்தில் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் வருவதில்லை. மேலும் மாதந்தோறும் 3 நோன்புகள், திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்புகள், வருடத்தில் சில குறிப்பிட்ட தினங்களில் நோன்புகள் ஆகிய உபரியான(கட்டாயக் கடமை அல்ல) குறித்து [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 4 Comments »
Tuesday, February 7th, 2012
நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 3 Comments »
Tuesday, January 31st, 2012
சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது. அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர்; சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது. அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும். சிலசமயம், குடலுக்குள் சேரும் கற்களானவை, குடலின் ஓரத்தில் பதிந்து விடுவதும் [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 3 Comments »
Sunday, January 29th, 2012
தினசரி சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு குடல் புற்று நோயின் தாக்கம் குறைவு என நிபுணர்களின் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது. புற்றுநோய் குறித்து ஸ்பெயின் நிபுணர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆய்வின் முடிவு குறித்து நிபுணர்கள் தெரிவிக்கையில், சாக்லேட்களில் கோகோ கலக்கப்படுகிறது. இதில் ஆன்டி ஆக்சிடென்டஸ் என்றழைக்கப்படும் உயிர் எதிர்ப்பு சக்தி உள்ளது. இவைகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய மூலக்கூறுகளை அழிக்கும் வல்லமை கொண்டது. எனவே சாக்லேட் சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் தாக்கம் குறைவு என கூறினர். உலகம் முழுவதும் குடல் புற்றுநோய்க்கு [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 2 Comments »
Thursday, January 19th, 2012
* ஆமணக்குச் செடி வேரைக் கொண்டு வந்து, நன்றாகப் பொடித்து, அத்துடன் தேனைக் கூட்டிப் பிசைந்து, ஒரு டம்ளர்; தண்ணீரில் அப்படியே ஊற வைத்து விடுங்கள். இரவு முழுவதும் ஊறினதும், காலையில் அதைக் கலக்கி வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள். நாலு வாரத்திற்குள் உங்களுக்கு நல்ல பலன் தெரியும். * பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவரம் பருப்புடன் மிளகு சேர்த்து சமைத்து உண்டு வந்தால், 3 மாதங்களில், பெருத்த உடல் பருமன் குறைந்து, நல்ல கெட்டியடைந்து [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 2 Comments »
Monday, January 16th, 2012
காதின் கேட்கும் திறன் இயல்பாக இருக்க, காதினுள் உட்புகும் ஒலியானது நடுக்காதுப் பகுதியில் நுழைந்து பரவி காது ஜவ்வில் மோத வேண்டும். ஆனால் ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு இருப்பவர்களுக்கு காதின் உள்ளே நு ழையும் ஒலி ஜவ்வில் மோதுவதற்கு முன்பே ஸ்டேப்ஸ் எலும்பு வளர்ச்சியால் தடுக்கப்படுகிறது, இதனால் காதின் கேட்கும் திறன் பாதிப்படைகிறது. ஒடெஸ்லோரோசிஸ் குறைபாடு குறித்து… நமக்கோ அல்லது நம் குழந்தைகளுக்கோ எவரானாலும் சரி, வயது வேறுபாடு இன்றி காதுக்குள் விநோதமான சத் தம் கேட்கத் தொடங்கினால் [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Sunday, January 8th, 2012
லண்டன்:மனித மூளையின் முக்கிய ஆற்றல்கள் ஒருவருக்கு ஐம்பது வயதைத் தொடுவதற்கு முன்பே குறைய துவங்குவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் யூனிவர்ஸிடி காலேஜின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில்தான் மனித மூளையின் முக்கிய ஆற்றல் 45 வயது முதல் குறையத் துவங்குவதாக தெரியவந்தது. பிரிட்டீஷ் மெடிக்கல் ஜர்னல் என்ற மருத்துவ மாத இதழ் இந்த ஆய்வு முடிவுகளை பிரசுரித்துள்ளது. 45 வயது முதல்கொண்டு 70 வயது வரையிலான பிரிட்டிஷ் அரசாங்க ஊழியர்களை பத்து வருட காலத்துக்கு தொடர்ந்து பரிசோதித்து இந்த [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | 1 Comment »
Saturday, January 7th, 2012
பீட்ஸா, பர்கர், உள்ளிட்ட பாஸ்ட் புட் எனப்படும் நொருக்குதீனிகளை உட்கொள்ளும் சிறுவர்களின் மூளையில் பாதிப்பு ஏற்படும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நொறுக்குத் தீனிகளில் உள்ள டிரான்ஸ் ஃபேட் எனப்படும் கொழுப்பே இதற்கு காரணம் என்று ஆய்வு எச்சரித்துள்ளது. டிரான்ஸ் பேட் கொழுப்பு: தினசரி உணவில் 2 கிராம் டிரான்ஸ் பேட் போதுமானது. இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் டிரான்ஸ் பேட் எனப்படும் கொழுப்பு அதிகமுள்ள கேக், பீட்சா, பர்கர், சாக்கோ [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Sunday, January 1st, 2012
வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது; சத்தானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும். இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் – ஹார்மோன் மாற்றங்கள். உங்கள் குழந்தைகள் உணவை ருசித்து, ரசித்து, [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Wednesday, December 28th, 2011
சில நேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். அந்த மாற்றம் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். இரத்தச் சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம். இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும். மேலும், இரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்கவேண்டிய `பிங்க்’ நிறம் மறைந்து, வெளுத்துவிடும். இரும்புச்சத்து இரத்தத்தில் உள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்யும் என்பதால், [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Friday, December 23rd, 2011
கிஸ்மிஸ் பழம் என்று அழைக்கப்படும் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் பல நிறைந்துள் ளன. இதில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோஸ் நிறைந்துள்ளன. விட்டமின்களும் அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. பொட்டாசியமும், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினமும் இருவேளை உலர் திராட்சையைச் சாப்பிட்டு [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Tuesday, December 20th, 2011
லண்டன்:சூரிய ஒளி உடலில் நன்றாக படும் நபர்களுக்கு அம்மை நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ ஆய்வாளர்கள் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரியவந்துள்ளது. நன்றாக சூரிய ஒளிபடும் பகுதிகளில் மனிதர்களை அம்மை நோய் தாக்குவது குறைவு எனஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். சூரிய ஒளியில் அடங்கியுள்ள அல்ட்ரா வயலட் கதிர்கள் அம்மை நோய்க் கிருமிகளை அழிப்பதுதான் இதற்கு காரணம் என ஆராய்ச்சிக்கு தலைமை வகித்த டாக்டர்.ஃபில்ரைஸ் கூறுகிறார். சிக்கன் பாக்ஸ் என்று [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
Tuesday, December 20th, 2011
இதயத்துடிப்பின் சீரற்ற நிலை இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிக்கக் கூடும். இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள் இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. [...]
Tags: ஆரோக்கியம்
Posted in ஆரோக்கியம், செய்திகள் | Comments Off
விமர்சனங்கள்