இஸ்லாம்

ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை

Sunday, February 12th, 2012
Imam Hassan Al Bannah

நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்) ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான். காலம்,வரலாறு, [...]

இனிக்கும் இல்லறம் -5

Saturday, December 31st, 2011
இனிக்கும்இல்லறம்1

கணவன்-மனைவி இவர்களுக்கான ரோல் என்ன? கணவன்-மனைவி இருவருக்குமே குடும்பத்தில் ஒரு ரோல் அல்ல பல ரோல்கள் காத்திருக்கின்றன. இது என்ன சீரியலா? சினிமாவா? ரோலைப் பற்றி பேசுகிறோம்! என உங்கள் மனதில் கேள்வி எழலாம்! ஆனால் குடும்பத்தில் ஓர் ஆணும், பெண்ணும் பல ரோல்களில் நடிக்க வேண்டியுள்ளது. ஆனால் நீங்கள் நினைப்பது போன்ற நடிப்பு அல்ல. உண்மையிலேயே நீங்கள் உங்களது எதார்த்தமான நடிப்பை  வெளிப்படுத்துகின்றீர்கள்! பெற்றோருக்கு மகனாக, மனைவிக்கு கணவனாக, பிள்ளைகளுக்கு தந்தையாக, உடன்பிறந்தவர்களுக்கு சகோதரனாக ஒருஆண் [...]

பாபரி மஸ்ஜித் மீட்பு – ஒரு வரலாற்றுக் கடமை

Wednesday, December 7th, 2011
babari

இளைஞர்களே! இளம்பெண்களே! எழுச்சியின் வித்துக்களே! சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை பெரியோர்களே! தாய்மார்களே! சற்று நில்லுங்கள். உங்கள் அன்றாடப் பணிகளுக்கு சிறிது ஓய்வு கொடுத்துவிட்டு வரலாற்றை சற்று திரும்பிப் பாருங்கள். சதிகளாலும் துரோகங்களாலும் பின்னிப் பிணையப்பட்ட சோக வரலாறு ஏக்கத்துடன் உங்களை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக நீங்கள் வரலாற்றை மீட்டெடுத்து நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவீர்கள் என அந்த வரலாறு உங்களை நம்பிக்கையோடு பார்த்து கொண்டிருக்கின்றது. அநீதிக்கும் ஆணவத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பீர்கள் என அது உறுதியாக [...]

ரமலான் மாத நிகழ்வுகள்

Tuesday, August 2nd, 2011
ramdan-blessings

இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம். ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.” ஆம்! இது நோன்பின் மாதம் இரவு வணக்கத்தின் [...]

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!

Tuesday, August 2nd, 2011
images

மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன. அமெரிக்காவிலிருந்து இறக்குமதிச் செய்யப்பட்ட காதலர் தினமும்(வேலண்டைன்ஸ் டே), பெற்றோர் தினமும் அதுபோல தற்போது பிரபலமாகி வரும் அக்‌ஷய திதியும் விற்பனைக்காக காத்திருக்கும் தினங்களாகும். கல்வித்துறை கூட சந்தைமயமாகிவிட்டது. அனைத்துமே சந்தைமயமாக்கப்பட்டு வரும் காலக்கட்டத்தில் தான் நாம் வாழ்ந்துவருகிறோம். புண்ணியங்கள் பூத்துக்குலுங்கும், இறையச்சத்தின் மாதமான [...]

ரமளானை வரவேற்போம்!

Sunday, July 31st, 2011
welcome_ramadan[152x149]

நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம். இந்த மாதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் பற்றி இறைமறையாம் அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது: ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு [...]

ஷஅபான் மாத நிகழ்வுகள்

Wednesday, July 27th, 2011

இது ஹிஜ்ரா காலண்டரின் 8வது மாதம். ஷஅபான் என்ற பதத்தின் பொருள் : தொடர்ந்து உயர்வது (இடைவிடாமல் அதிகரிப்பது) ஷஅபான் பிறை பிறந்து விட்டால் எண்ணிலடங்கா அருள்கள் நம் மீது பொழிய ஆரம்பிக்கின்றன. மழை துவங்கும்பொழுது சொட்டு சொட்டாக ஆரம்பித்து பின்னர் சோ வெனப் பெய்வது போல் ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அருள்கள் ஆரம்பித்து பின்னர் அருள் மழை சோ வெனப் பொழியும் இந்த மாதத்தில். இறுதியில் அருள்களின் மாதமான ரமலானில் கொண்டு போய் நம்மை இட்டுச் [...]

இஸ்ரேலில் சுனாமியின் எச்சரிக்கை

Monday, July 18th, 2011
phpThumb_generated_thumbnailjpg

“நாம் தென் ஆஃப்ரிக்கா போல மாறப்போகின்றோம்; பொருளாதாரத் தடை கல்லை ஒவ்வொரு இஸ்ரேலிய குடும்பமும் உணரப்போகிறது” என்றார் மிகப்பெரும் வியாபாரப் புள்ளியான இடாம் ஒஃபர். கடந்த மே மாதம் மிகவும் இரகசியமாக நடைபெற்ற இக்கூட்டத்தில் வர்த்தக பெரும்புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த வர்த்தக முதலைகளின் முக்கிய கவலை என்னவெனில், வரும் செப்டம்பர் மாதம் (2011)  பலஸ்தீன்  ஆணையம், ஐ.நா சபையின் பொதுக் குழுவில் பலஸ்தீனை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என குரல் எழுப்பப்போகிறது என்பது தான். [...]

மேற்குலகை கண்டிப்போம்-விடுதலை என்பது வார்த்தை அல்ல வேட்கை என நிரூபிப்போம்

Thursday, July 14th, 2011
niqab

உலகில் வன்முறைகள் பெருகிவிட்டன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, விபச்சாரம், என அழிவின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மனித சமூகம். கலாச்சார சீரழிவினால் ஒட்டு மொத்த உலகமும் பாதிப்புக்குள்ளாகிறது. இது என்னுடைய கருத்தல்ல. மனித நேயம் கொண்ட, பகுத்தறியும் சக்தியில்லா விலங்கினங்களையும் பகுத்தறிந்து ஆராய்ந்து முடிவெடுக்கும் திரண்படைத்த மனிதர்களையும் வேறுபடுத்தி காட்டும் சிந்திக்கும் திரண் கொண்ட சீரிய மனிதர்களின் எண்ணங்களில் உலாவிக் கொண்டிருக்கும் கருத்தாகும். இது போன்ற கலாச்சார சீரழிவுகள் மேற்குலகின் இறக்குமதி. பெண்களை போகப்பொருளாக்கி, வியாபார [...]

வரலாறு புகட்டும் பாடம்

Tuesday, June 28th, 2011
islamic warrior

உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது. உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து [...]

ஜமாதுல் ஆஃகிர் & ரஜப் மாத நிகழ்வுகள்

Thursday, June 16th, 2011

ஜமாதுல் ஆஃகிர் இது இஸ்லாமிய காலண்டரின் 6வது மாதம். நிகழ்வுகள்: ஹிஜ்ரி 8ம் ஆண்டு ஸலாசில் யுத்தம் நடைபெற்றது. மரணம்: அபூஸலமா (ரலி) அவர்கள் இந்த மாதத்தில் இறந்தார்கள். ரஜப் இது இஸ்லாமிய காலண்டரின் 7வது மாதம். “ரஜபா” என்ற பதத்திற்கு “மரியாதை கொடுப்பது” என்று பொருள்படும். ரஜபா என்ற பதத்திலிருந்துதான் ரஜப் என்ற வார்த்தை வந்தது. நிகழ்வுகள்: பிறை 27ல் (ஞாயிறு அல்லது திங்கள்) இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் விண்ணுலக யாத்திரை (மிஃராஜ்) சென்றார்கள். [...]

ஜமாதுல் அவ்வல் – இஸ்லாமிய காலண்டரின் 5வது மாதம்

Sunday, April 3rd, 2011

இந்த மாத நிகழ்வுகள்: 1. ஹிஜ்ரி 8ம் ஆண்டு மூத்தா போர் நடைபெற்றது. நிராகரிப்பாளர்களுக்கெதிராக நடந்த இந்தப் போரில் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்…) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. சிரியாவின் பிரபல நகரமான மூத்தாவில் இந்தப் போர் நடந்ததால் இதற்கு “மூத்தா போர்” என்று பெயர் வந்தது. ஹஸ்ரத் ஸெய்த் இப்னு ஹாரிதா (ரலி…) அவர்களை அண்ணலார் இந்தப் போருக்கு முதல் தளபதியாக நியமித்தார்கள். 2. ஹஸ்ரத் காலித் இப்னு வலீத் (ரலி…) அவர்களை (இந்தப் போரின் நான்காவது [...]

பண்பாடுகளில் மிளிரும் இஸ்லாம்

Monday, March 14th, 2011

ஒரு நாள் மதிய வேளை. நானும் எனது குடும்பத்தினரும் சாலையில் வாகனத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தோம். கடுமையான வெயிலின் காரணமாக, எதிரே தென்பட்ட ஹோட்டலின் முகப்பு பகுதியில் நிழலுக்காக ஒதுங்கினோம். சாலையில் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. ஹோட்டலில் ஆள் நடமாட்டமும் அவ்வளவாக இல்லை.  ஹோட்டலுக்கு முன்பாக சாலையில் அரபி ஒருவர் வாடகை வாகனத்தில் அமர்ந்திருந்தார். டிப்டாப்பான உடை தரித்திருந்த அவருடைய முகத்தில் கடுமையான எரிச்சல் தென்பட்டது. காரணம் அவருடைய வாகனம் செல்ல முடியாதவாறு முன்னால் வேறொரு வாகனம் [...]

ரபீஉல் ஆஃகிர் மாத நிகழ்வுகள்

Saturday, March 5th, 2011
imagesCAXSK23D

இது இஸ்லாமிய காலண்டரின் நான்காவது மாதம். ரபீயுல் ஆஃகிர் என்ற பதத்திற்கு “வசந்த காலத்தின் இரண்டாவது மாதம்” என்று பொருள். இந்த மாதம் நடைபெற்ற நிகழ்வுகள்: ஹிஜ்ரி 3ம் ஆண்டு புஹ்ரான் என்னுமிடத்தில் ஃபுரூஃ என்னும் போர் நடைபெற்றது. ஹிஜ்ரி 9ம் ஆண்டு ஸரிய்யா என்ற போர் நடைபெற்றது. இந்தப் போரில் இறைத்தூதர் (ஸல்…) அவர்கள் கலந்துகொள்ளவில்லை. ஹஸ்ரத் அலீ இப்னு அபீதாலிப் (ரலி…) அவர்களை போர்த் தளபதியாக நியமித்து அண்ணலார் அனுப்பி வைத்தார்கள். இந்த மாதம் [...]

இரண்டாவது உமரின் இறையுணர்வு!

Tuesday, February 22nd, 2011
manathodu_manathai

“மக்களுக்கு நல்லவைகளைச் செய்யவே இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பினான். அவர்களைத் தண்டிப்பதற்காக அல்ல. தடையில்லாமல் ஓடும் ஒரு நதியை அவர்கள் வெட்டிச் சென்றார்கள். எல்லோரும் சமமாக அதனைப் பயன்படுத்துவதற்காக அதனை விட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பிறகு ஒருவர் அதிகாரமேற்றார். அவர் அந்த நதியில் கை வைக்கவில்லை. பின்னர் மற்றொருவர் வந்தார். அவரும் அந்த நதியின் ஓட்டத்தில் தடை ஏற்படுத்தவில்லை. அதன் பின் வந்தவர் சிறிய ஓடைகள் வெட்டி அந்த நதியைப் பிரித்து விட்டார். இப்பொழுது [...]

நபிகள் நாயகத்தின் தீர்ப்பை நோக்கி நகருமா முஸ்லிம் காழி நீதிமன்றங்கள்?

Tuesday, January 4th, 2011

9மனித வாழ்வில் ஏற்படுகின்ற அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் அல்லாஹ்வின் வேதமாகிய அல்குர்ஆனிலும், அண்ணல் நபியின் போதனைகளிலும் தீர்வுகளைக் காணலாம், அவற்றில் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களும் உள்ளடங்கும். இஸ்லாமிய நீதித்துறை பற்றியும், அதன்தீர்ப்புக்கள் பற்றியும் அறியாத அரைகுறைகளால் இஸ்லாமிய சட்டங்கள் அர்த்தமற்ற முறையில் விமர்சிக்கப்படுகின்றதே தவிர புத்தி ஜீவிகளால் அவை என்றும் விமர்சிக்கப்பட்டதில்லை. முஸ்லிம் காழிகள் நீதி மன்றங்கள் இஸ்லாமிய நாடுகளில் முஸ்லிம்கள் தமது மார்க்க விவகாரங்களை உலமா சபைகள் மூலமாகவும், உரிமைகள், சட்டம் சார்ந்த அம்சங்கைள காழிகளின் நீதிமன்றங்கள் [...]

கருத்து முரண்பாடுகளும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளும்

Tuesday, January 4th, 2011

-அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தனமானது, அவனது அருளும், சாந்தியும் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் வழி நடந்த ஸஹாபாக்கள், தாபீயீன்கள் தபவுத்தாபியீன்கள் அனைவர் மீதும் நிலையான சாந்தியும், சமாதானமும் நிலைக்கட்டுமாக! சீரமைப்பின் அவசியம் முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் மார்க்கம் தொடர்பான முரண்பாடுகளை இனம் கண்டு அவற்றை காத்திரமான வழிமுறைகள் மூலம் சீரமைப்பது தகுதியும், அறிவும் உள்ள இஸ்லாமிய அழைப்பாளர்கள் மீதுள்ள கடமையாகும். முன்னோர்களான [...]